ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நெல்லை மாவட்டம் கடையம் ஒன்றியத்தின் 12-வது வார்டில் தி.மு.க சார்பாக ஜெயகுமார் போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாகச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுவரும் மக்கள் நலத்திட்டப் பணிகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்.

Also Read: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் 2 கட்டமாக வாக்குப்பதிவு! – அக்டோபர் 12-ல் வாக்கு எண்ணிக்கை

அதே வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சந்திரசேகர் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சித் தலைவரான டி.டி.வி.தினகரன் படத்தை அச்சடிப்பதற்குப் பதிலாக தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் படத்துடன் தனது குக்கர் சின்னத்தை அச்சிட்ட பிட் நீட்டீஸ்களை வாக்காளர்களுக்குக் கொடுத்து வாக்கு சேகரிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அ.ம.மு.க வேட்பாளரின் செயலால் அதிருப்தி அடைந்துள்ள தி.மு.க-வினர் இது தொடர்பாக கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், இது குறித்து தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர். இது பற்றி அ.ம.மு.க வேட்பாளரான சந்திரசேகரிடம் கேட்டதற்கு, “முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள எல்லோருக்கும் முதல்வர். எனக்கும் அவர் முதல்வர் என்பதால் அவரது படத்தை அச்சடித்துள்ளேன்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடப்பது போல, இந்த வார்டில் என்னைத் தேர்வு செய்தால் நல்லது செய்வேன் என்பதை வெளிப்படுத்தவே அவரது படத்துடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நான் பிரசாரம் செய்கிறேன். எனது நோக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தான் என் மீது விமர்சனம் செய்கிறார்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.