பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்கிறார்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சரண்ஜித் சிங் சன்னி

இதனை அடுத்து, எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து இன்றுகாலை முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார். ராகுல் காந்தி இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.