உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய கூட்டணி சுமூகமாக செல்வதாகவும், வருகிற 22 ஆம் தேதிக்குள் இடங்கள் முடிவு செய்யப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில், மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும், பெட்ரோல் டீசல் விலையில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், விலையை கட்டிப்பாட்டிற்குள் வைக்க பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.