மாங்காட்டில் குடும்பத் தகராறு காரணமாக கழிவு நீர் தொட்டியில் விழுந்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாங்காடு அடுத்த பட்டூர், புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பர்கித்பீவி (30). இவருக்கும் பட்டூர், தீன் நகரைச் சேர்ந்த இதாயத் உசேன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இதாயத் உசேன் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

image

இதனால் மனமுடைந்த பர்கித்பீவி கோபித்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். இதையடுத்து இன்று காலை பர்கித்பீவியின் தாய் மரியம் பீவி (66), கழிவறைக்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடி திறந்திருந்ததால் உள்ளே எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது அதில், பர்கித்பீவி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த பர்கித்பீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

மேலும் வழக்குப் பதிவு செய்த போலீசார் பர்கித்பீவியின் கணவர் இதாயத் உசேனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் உயிரிழந்துள்ளதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி ஒரே வருடத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 5 பேர் மரணம் – விலகுமா மர்மம்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.