ஆறு முக்கிய நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்து காப்பீட்டு தொகை உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதித்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றுக்கான மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய், எலும்பு முறிவு, ஆஞ்சியோ பிளாஸ்டிக், தீ காயங்களுக்கான சிகிச்சை இவற்றுக்கு காப்பீடு உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.