உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை குறித்தான அரசாணையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை வெளியிடுள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. வார்டு மறு வரையறை செய்யப்படதாதல் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை குறித்தான அரசாணையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை வெளியிடுள்ளது.