வேலூர் காட்பாடியை அடுத்துள்ள தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற தேவராஜ். இவர்மீது காட்பாடி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குச் சம்பந்தமாக தேவா கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், தேவாவின் சிறைக்காவலை நீட்டித்து அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு எஸ்.பி செல்வகுமார் பரிந்துரை செய்திருந்தார்.
Also Read: தமிழ்நாடு டு கர்நாடகா: க்ரைம் ரேட்டிங்கில் டாப்! -ரௌடி வசூர் ராஜா மீது பாய்ந்த 8-வது குண்டர் சட்டம்
அதன்படி, தேவாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். சிறையிலுள்ள இளைஞர் தேவாவிடம் அதற்கான நகலை போலீஸார் வழங்கினர். இதனிடையே, காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடியான தேவாவின் புகைப்படம் தவறுதலாக செய்தியில் இடம் பெற்றுவிட்டது. ரௌடி தேவா மீதும் கொலை மிரட்டல், கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்தல், பண மோசடி, வழிப்பறி உட்பட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக விவரிக்கிறது வேலூர் காவல்துறை.