இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் லீட்ஸ் – ஹெட்டிங்கிலே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார். அதன்படி இந்தியாவுக்காக கே.எல். ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எட்ஜாகி வெளியேறினார் ராகுல். தொடர்ந்து வந்த புஜாரா மற்றும் கேப்டன் கோலியும் ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். இந்தியா 10.5 ஓவர்களில் 21 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்னர் வந்த ரஹானே, ரோகித் ஷர்மாவுடன் இணைந்து நிதானமாக இன்னிங்ஸை அணுகினார். 35 ரன்களுக்கு அவர்களது பார்ட்னர்ஷிப் தொடர்ந்தது.
இந்த நிலையில் முதல் உணவு இடைவேளைக்கு முன்பாக ராபின்சன் வீசிய ஓவரில் ரஹானே 54 பந்துகளில் 18 ரன்களை சேர்த்து வெளியேறினார். தற்போது களத்தில் ரோகித் 75 பந்துகளுக்கு 15 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். அடுத்ததாக பண்ட் களம் இறங்க உள்ளார். இந்தியா 56 ரன்களை எடுத்துள்ளது.