சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் குறித்து விவாதிப்பது மரபுக்கும், மாண்புக்கும் எந்த வகையில் உட்பட்டது? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க, கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பது பேரவை மரபை மீறிய செயல் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கோடநாடு விவகாரம் குறித்து பேரவையில் பேச காங்கிரஸ் சட்டமன்றக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை நோட்டீஸ் கொடுத்திருப்பது குறித்து, ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.