மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்து 55,329 புள்ளியில் வர்த்தகத்தை முடித்தது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 118 புள்ளி குறைந்து 16,450 புள்ளியில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. டெல்டா வகை கொரோனா பல நாடுகளில் வேகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்களால் உலகளவில் பங்குச் சந்தைகள் சரிவுப் போக்கில் உள்ளன. அதன் தாக்கமே இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.59% விலை குறைந்து 66.06 டாலராக உள்ளது.