ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கத்தால் சிறுமியை திருமணம் செய்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்த விசாரணையில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வருவது தெரியவந்தது. அங்கு சென்று சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஃபேஸ்புக்ணுல் ஏற்பட்ட பழக்கத்தால் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச்சென்று திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.