தடகள வீராங்கனை ரேவதி அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஏற்படும் செலவை ஏற்பதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த வீராங்கனை ரேவதிக்கு அவர் படித்த கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் வீராங்கனை ரேவதி, பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.
ஆனால் பயிற்சியாளர் தாம் பெற்ற பரிசுத்தெகையை மேடையிலேயே ரேவதிக்கு வழங்கினார். மேலும் விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ரேவதியின் சாதனைகளை பார்த்து மேலும் பலர் உருவாக வேண்டும் எனவும், அவர் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தேவையான செலவை தாமே ஏற்பதாகவும் கூறினார்.
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்,மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு ஆகக்கூடிய அத்தனை செலவுகளையும் நானே ஏற்று தேவைப்படும் உதவியையும் செய்து தருவேன் என்று உறுதியளித்தேன்.(2/3) pic.twitter.com/P6N7D6Xn70
— P Moorthy (@pmoorthy21) August 12, 2021