கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் பேசிய அவர், கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், வராவிட்டாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலர் தயக்கம் காட்டுவதாகவும், தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு எனவும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.