ஒலிம்பிக்கில் வென்ற வீரர்களுடன் தொலைபேசியில் பேசுவது மட்டும் போதாது என்றும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகள் சென்று சேர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி வீடியோ அழைப்பு மூலம் பேசியிருந்த நிலையில, ராகுல் இக்கருத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு அறிவித்தபடி இன்றும் பரிசுகள் சென்று சேரவில்லை என வெளியான பத்திரிகை செய்திகளை சுட்டிக்காட்டி இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மட்டும் போதாது என்றும் பாராட்டுகளும் பரிசுகளும் அவசியம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்