மாமல்லபுரம் அருகே கார் விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில், அதிவேகமாக வந்த கார், திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்புகளில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த், அவரது இரு ஆண் நண்பர்கள் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாஷிகாவின் தோழியான பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.