உளுந்தூர்பேட்டையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், அதிமுகவை தலைமையேற்று வழி நடத்த வா எனவும் நிரந்தரப் பொதுச்செயலாளர் சசிகலாதான் எனவும் நகரம் முழுதும் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் இடையே தொலைபேசியில் பேசி வருவதால் அவரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் அவர்களின் படமும் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது. இவருடைய படத்தை அதிமுகவினர் சில ஆண்டுகளாக புறக்கணித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.