தமிழ்நாட்டில் இன்று ஒருநாளில் பதிவான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, 8,633 என்று தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவரக்ள் 8,631 என்றும்; வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் 2 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பிற தகவல்கள்:
“இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் (வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை) 89,009 பேர். கடந்த 24 மணிநேரத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள், 1,70,269. இதுவரை தமிழகத்தில் 3,08,25,619.
இன்று உறுதிசெய்யப்பட்ட கொரோனா நோயாளிகளில், 4,882 பேர் ஆண்கள்; 3,751 பேர் பெண்கள். தமிழகத்தில் 273 கொரோனா பரிசோதனை மையங்கள் இருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 19,860. இதுவரை தமிழகத்தில் குணமடைந்தவர்கள் 22,86,653 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 287. இவர்களில் 145 பேர் தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்களாகவும், 142 பேர் அரசு மருத்துவமனையை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 30,835 என உயர்ந்துள்ளது” எனக்கூறப்பட்டுள்ளது.