தமிழ்நாட்டில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக நியமனம்
- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண் துறை இயக்குநராக நியமனம்
- வேலூர் ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம், கூட்டுறவுத்துறை பதிவாளராகவும் நியமனம்
- திருப்பத்தூர் ஆட்சியரான சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.ஆக நியமனம்
- திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம்
- சுற்றுலாத்துறை இயக்குநராக திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமனம்
- சமூக நலத்துறை இயக்குநராக அரியலூர் ஆட்சியர் ரத்னா நியமனம்
- ,தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக தஞ்சை ஆட்சியராக இருந்த கோவிந்தராவ் நியமனம்
- தொழில்கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா நியமனம்
- ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக லதா நியமனம்
- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளராக வள்ளலார் நியமனம்
- ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி நியமனம்
- சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமனம்
- மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலாளராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
- நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் நியமனம்
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம்
என தமிழக அரசு அறிவித்துள்ளது.
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F986962258706019%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>