தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என மக்கள் நல்வாழ்வு துறையின் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மைக்ரோ பிளான் அமைக்க திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,01,19,582 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21,02,648 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.