தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உள்ளது.

கடந்த மே 21 ஆம் தேதி அதிகபட்சமாக கொரோனா தொற்று 36,184 ஆக இருந்தது. 22 ஆம் தேதி 53,873 பேருக்கும், 23 ஆம் தேதி 35,483 பேருக்கும், 24 ஆம் தேதி 34,867 பேருக்கும், 25 ஆம் தேதி 34,285 பேருக்கும், 26 ஆம் தேதி 33,764 பேருக்கும், 27 ஆம் தேதி 33,361 பேருக்கும், 28 ஆம் தேதி 31,079 பேருக்கும், 29 ஆம் தேதி 30,016 பேருக்கும், 30 ஆம் தேதி 28,864 பேருக்கும் என படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 26,509, வெளிமாநிலத்தில் இருந்து வந்த 4 பேர் என 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 2,689 பேருக்கு தொற்று இருந்த நிலையில் இன்று 2,467 ஆக குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 292 பேரும் ,தனியார் மருத்துவமனைகளில் 198 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் இல்லாத 111 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 96 பேர் உயிரிழந்துள்ளனர். 12 வயதிற்குட்பட்ட 910 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.