5 ஆயிரம் நீர் கரடிகள் மற்றும் நீரில் ஒளிரும் தன்மை கொண்ட 128 சிறிய வகை மீன்களை விண்வெளியில் இருக்கும் ஆய்வு மையத்துக்கு ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் அனுப்புகிறது நாசா.
ஜூன் 3 ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் 22 ஆவது செயற்கைக்கோளை விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதில் விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு கடல் வாழ் உயிரினங்களான 5 ஆயிரம் நீர் கரடிகள் மற்றும் ஒளிரும் தன்மை கொண்ட 128 சிறிய வகையிலான மீன்களை நாசா ராக்கெட் மூலம் அனுப்புகிறது.
மேலும் இந்த ராக்கெட்டில் சில சோலார் பேனல்களையும் அனுப்புகிறது. இந்தக் நீர் கரடியும், சிறிய வகை மீன்களும் நாசா தங்களுடைய ஆராய்ச்சின் ஒரு பகுதிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.