தமிழகத்தில் ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றிற்கு அரசு மருத்துவமனைகளில் 178 பேரும், தனியார் மருத்துவமனையில் 125 பேரும் என 303 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,359 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 6,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 82 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 2013 பேரும் கோவையில் 3124 பேரும்,கடலூரில் 719 பேரும், தர்மபுரியில் 289 பேரும், அரியலூரில் 254 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.