அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக அவள் விகடன் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் `பெல்லா சானிட்டரி நாப்கின்ஸ்’ வழங்கும் `அவள் விகடன்’ அன்னையர் தின ஆன்லைன் கவிதைப் போட்டி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அம்மாவைப் பற்றி 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டுமென்று விதிமுறையும் சொல்லப்பட்டு இருந்தது.

அம்மா

மிகக் குறுகிய நாள்களிலேயே 537 கவிதைகள் கிடைக்கப்பெற்றன. கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அவள் விகடன் ஆசிரியர் குழு இணைந்து கவிதைகளைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000 வழங்கப்படும். இதுதவிர, ஐந்து நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 வழங்கப்படும். வெற்றி பெறும் அனைவருக்கும் பெல்லா சானிட்டரி நாப்கின்ஸ் வழங்கும் ஒரு கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்படும்.

கவிதைப் போட்டி

இறுதிப்போட்டி மே 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஆன்லைனில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் அன்னையர் தின சிறப்புரையாற்றி வெற்றியாளர்களை அறிவிக்க உள்ளார்.

கட்டணமில்லா இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3ouf2PD

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.