சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன், சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சீமானின் தந்தையார் செந்தமிழன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தந்தையார் திரு.செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன். தந்தையாரை இழந்து வாடும் அண்ணன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல். ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.