முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.

கொரோனா 2 ஆம் அலையில் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.  ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மேல் இறப்பு விகிதமும் எகிறிச் செல்கிறது. இரண்டாம் அலையில் பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று கொரோனா தொற்றுலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.