தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000ஐ தாண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 293 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 7,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,670, கோவை மாவட்டத்தில் 2,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 வயதுக்கு உட்பட்ட 1,091 சிறார்கள் ஒரே நாளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த இரண்டு ஆண் குழந்தைகள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.