புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
அவருக்கு 70 வயதாகிறது. புதுச்சேரியில் நான்காவது முறையாக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் இன்று 16333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அதே நேரத்தில் புதுவையில் புதிய உச்சமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.