தமிழக சட்டமன்றம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் எதிர்க்கட்சி எனும் பெரும் பொறுப்பை சிறப்புடன் நிறைவேற்றுவோம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றி இருக்கும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவர் எனக் கூறியுள்ளனர். தமிழக சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி எனும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மனத் தூய்மையுடன் செவ்வனே நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.