கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கன்னட நடிகர் அர்ஜூன் கவுடா ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சேவையாற்றி வருகிறார்.
யுவரத்னா, ரஷ்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜூன் கவுடா. கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ராக்ஜட் ஸ்மைல் என்ற சேவை அமைப்பு மூலம் உதவி வரும் வரும் அர்ஜூன் கவுடா, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆம்புலன்ஸ் மூலம் சேவையாற்றி வருகிறார். குறிப்பாக ஆம்புலன்ஸை தானே ஓட்டிச் சென்று உதவி வருகிறார்.