இந்தியாவில் கொரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் ஊரடங்கு குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை முடிவெடுப்பார் என மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்து பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது, நோயாளிகளுக்கு தேவைப்படும் பிராண வாயு தட்டுப்பாடு என சகல சிக்கலையும் மகாராஷ்டிரா எதிர்கொண்டு வருகிறது. டெல்லியில் 7 நாட்கள் முடக்கம் அமலாகி உள்ளது.
இந்நிலையில், “அனைத்து அமைச்சர்களும் ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்துமாறு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் நாளை எடுப்பார்” என ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.