கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8449 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது. ஒரே நாளில் 33 பேர் இறந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த 33 பேரில் 11 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவுக்கு 13 ஆயிரத்திற்கும் மேறப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 13 வயதிற்குட்பட்ட 250 சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.