பொருளாதாரத்துறைச் செயலாளராக இருந்த தருண் பஜாஜ் திடீரென வருவாய்த்துறையின் செயலாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்.
தற்போது பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் தலைவராக இருக்கும் அஜித் சேத், பொருளாதாரத் துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியான தருண், பொருளாதாரத் துறையில் பழுத்த அனுபவம் கொண்டவர். நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரந்தவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் பொருளாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்ததன் பின்னணியில் இவர்தான் இருந்தார்.
எனினும், அண்மையில் சிறு சேமிப்புக்கான வட்டிக் குறைப்பு அறிப்பை நிதி அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல் வெளியிட்டதன் விளைவாக அரசின் கடுங்கோபத்துக்கு உள்ளானார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பு தவறு என அதைத் திரும்பப் பெற்றார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்போது அவர் துறை மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு அதுதான் காரணமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.