பைலட் ஆக விரும்பும் 9 வயது கேரள சிறுவனுக்கு விமான அனுபவத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழங்கினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி அண்மையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளாவுக்கு வருகை புரிந்தார். அப்போது கன்னூர் மாவட்டம், கீழூர் குன்னு என்ற இடத்தில் உள்ள ஒரு டீக்கடையில் அத்வைத் என்ற 9 வயது சிறுவனை ராகுல்காந்தி பார்த்து பேசினார். அப்போது அந்த சிறுவன் ராகுல்காந்தியிடம் ஒரு பைலட் ஆக விரும்புவதாகக் கூறினார்.
View this post on Instagram
எனவே, மறுநாள், ஒரு விமானத்தின் காக்பிட்டை அந்த சிறுவன் பார்வையிட ராகுல்காந்தி ஏற்பாடு செய்தார். இதுகுறித்த வீடியோவை ராகுல்காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “எந்த கனவும் பெரிதாக இல்லை. அத்வைதின் கனவை நனவாக்க முதல் படி எடுத்துள்ளோம். இப்போது ஒரு சமூகத்தையும் ஒரு கட்டமைப்பையும் உருவாக்குவது நமது கடமையாகும். அது அவருக்கு பறக்க ஒவ்வொரு வாய்ப்பையும் கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.