ரியல்மி நிறுவனம் விரைவில் இந்தியாவில் ரியல்மி 8 5ஜி மற்றும் 8 புரோ 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிடும் என ட்விட்டர் மூலமாக உறுதி கொடுத்துள்ளது. அண்மையில் இந்தியாவில் வெளியான 8 சீரிஸ் போன்கள் 4ஜி வேரியண்டாக இருந்தது. இந்நிலையில் விரைவில் 8 சீரிஸ் போனில் 5ஜி வேரியண்ட் வெளியாகும் என தெரிய வந்துள்ளது. இருப்பினும் எப்போது வெளியாகும் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளது அந்நிறுவனம்.
பயனர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்விக்கு ரியல்மி இந்தியா சப்போர்ட் நிறுவனம் இந்த பதிலை அளித்துள்ளது. அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு தொடர்ந்து ரியல்மி நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடருங்கள் என தெரிவித்துள்ளது.
sach…bolun toh Realme 8 pro me …same especs ke sath 5G aa jata na…ekk duum tagra⚡⚡ competition ho jata iss market me….aap plzz ye feedback ko dhyan dijiye sach me..#Realme8pro same especs with 5G…plzz give the value of consumer feedback?#RealmeWillTrending #Indian
— Avinay Gupta (@AvinayGupta5) April 1, 2021
ஆண்ட்ராய்ட் 11, 5000 mAh பேட்டரி, 700 SoC மாதிரியானவை இந்த 5ஜி வேரியண்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோ மாடலில் டைமான்ஸிட்டி 800u சிப்செட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5ஜி போன்கள் இந்த மாதத்தின் பிற்பாதியில் வெளியாகும் என தெரிகிறது.