பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாக்கர் ஜாமன் கிரிக்கெட் உலகில் புதியதொரு சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங்கில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை தான் அவர் படைத்துள்ளார். மொத்தமாக 155 பந்துகளில் 193 ரன்களை அவர் விளாசி இருந்தார்.

இந்த அசத்தலான இன்னிங்ஸில் 18 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். ஒற்றை நபராக தன் அணியை காக்க வந்த மீட்பராக களத்தில் பேட் உடன் போராடி இந்த ரன்களை அவர் குவித்துள்ளார். அபாரமாக விளையாடிய அவர் கடைசி நேரத்தில் செய்த கவனக்குறைவால் விக்கெட்டை இழந்தார். 


இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்), தோனி 183 (நாட் அவுட்), கோலி 183 ஆகியோர் ரன்களை இரண்டாவதாக பேட் செய்து குவித்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.