அதிமுக வேட்பாளர்களுக்கு போட்டியாக களமிறங்கிய முன்னாள் எம்.பி ஏழுமலை உள்பட 6 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்.பி.ஏழுமலை, ஈஸ்வரி ஈஸ்வரசாமி, நாகராஜ், ரங்கசாமி, கமலஹாசன், ஸ்ரீதர் ஆகிய ஆறு பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/FFmuff2X2F
— AIADMK (@AIADMKOfficial) March 30, 2021