“உழைக்கும் மக்களுக்குதான் கொரோனா அண்டாது என்று சொன்னேன். தவறுதலாக அப்போது எங்கள் கட்சியின் தொண்டர்களையும் குறிப்பிட்டு விட்டேன். எனது கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” என குஜராத் மாநிலம் ராஜ்கோட் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் கோவிந்த் பட்டேல் கூறியுள்ளார்.
அரசியல் கட்சியினர் எந்தவித பொது நலனும் இல்லாமல் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டபடி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவது தான் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைப்பதால் அவர்களை கொரோனா தொற்று அண்டவில்லை” என எம்எல்ஏ கோவிந்த் தெரிவித்திருந்தார். தற்போது அதை தான் திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Gujarat | I wanted to say that labourers don’t contract coronavirus but added ‘BJP’ also in the same sentence, which is a mistake. I take my words back: Rajkot BJP MLA Govind Patel on his reported remark that BJP workers don’t contract COVID-19 as they work hard (21.03) pic.twitter.com/kIxINLGP6Q
— ANI (@ANI) March 22, 2021