திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி 6 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி சிறுகனூரில் நேற்று திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மற்றும் தேர்தல் நடைத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.