தி.மு.க ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை!

தி.மு.க உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “தி.மு.க ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை ’’எனத் தெரிவித்தார்

கே. பாலகிருஷ்ணன்

“மீண்டும் மாலையில் தகவல் சொல்கிறோம் என்று தி.மு.கவினர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க – பா.ஜ.க அமைத்துள்ள கூட்டணி காயலாங்கடை இன்ஜின் மாதிரி. அது ஓடாது: எனவும் கூறினார். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிகளின் பங்கீடு இன்னும் முடியவில்லை

அ.தி.மு.க, பா.ஜ.க – ஒப்பந்தம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தாலும், தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகி உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க – பா.ஜ.க உடன்படிக்கை

அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு அ.தி.மு.க தனது முழு ஆதரவை அளிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க சார்பில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவியும், மாநில தலைவர் எல். முருகன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.