திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவரும் காங்கிரஸ் செயற்குழுவில் கே.எஸ். அழகிரி கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. குறிப்பாக திமுக கூட்டணியில் 27 தொகுதிகளாவது வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பிலிருந்து 21 தொகுதிகள் தரலாம் என பேசிக்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது “நாம் கூட்டணியில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கம் வகித்துள்ளோம். வரும் சட்டமன்றத்தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளோம். அதிக தொகுதி ஒதுக்குவார்கள் என எண்ணினோம். ஆனால் தொகுதி எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்…” என பேச்சை நிறுத்திவிட்டு கண்கலங்கினார்.

தொடர்ந்த அழகிரி, “இனிமேல் நான் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டேன். நீங்களே சென்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு சொல்லுங்கள். கையெழுத்திட வருகிறேன்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.