சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. இந்த சீரியலில் மகா என்கிற கேரக்டரில் தொடரின் இயக்குநரும், ஹீரோவுமான திருமுருகனைக் காதலிக்கிறவராக நடித்தவர் இவர்.
சொந்த ஊர் காரைக்குடி. அந்த சீரியலுக்குப் பிறகு திருமுருகனின் ‘கல்யாண வீடு’, ராடான் தயாரித்த ‘வாணி ராணி’, ஜீ தமிழ் சேனலில் ‘நிறம் மாறாத பூக்கள்’, விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜுக்கும் நாளை மறுதினம் திருமணம் நடக்க இருக்கிறது. கீர்த்தி ராஜ் இன்ஜினீயரிங் முடித்து விட்டு தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்கான முகூர்த்தக்கால் நடும், நிகழ்ச்சி இன்று நடந்தது.
வாழ்த்துகள் சொல்லி கீதாஞ்சலியிடம் பேசினேன்.
”கீர்த்தி, வீட்டுல பெரியவங்க பார்த்து நிச்சயம் செய்த மாப்பிள்ளைதான். ஆனாலும் கல்யாணம் பேசி முடிச்ச நாள்ல இருந்தே எங்களுக்கிடையில் லவ்வும் ஸ்டார்ட் ஆகிடுச்சு. அதனால இதை லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்னே சொல்லிக்கலாம். திருவாரூர்ல கோயில்ல வச்சு நடக்குது. கொரோனா அச்சத்தால பெரியளவுல இல்லாட்டியும் முக்கியமானவங்களை அழைச்சிருக்கோம். கல்யாணத்துக்குப் பிறகு சீரியல்கள்ல நடிப்பேனாங்கிறதைப் பத்தி இப்ப எதுவும் சொல்ல முடியலை. கல்யாணத்துக்குப் பிறகு அவரும் நானும் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்றார்.