தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்த பாதிப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 86.37% தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

எனவே கொரோனா பரலை தடுக்கும் விதமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.