திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு முறையாக செயல்படவில்லை. அவர்களுக்கு தேவையான கடனை வழங்கவில்லை. வழங்கிய கடனும் முறையாக தொழில் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. சுய உதவி குழுவின் நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள்.

image

திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும். இந்த அறிவிப்பை பழனிசாமி கேட்டுக்கொண்டிருப்பார். உடனே அதை தள்ளுபடி செய்தாலும் செய்வார். நான் சொல்வதை அப்படியே செய்து வருகிறார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வரும். அவ்வாறு வந்தாலும் அதுதான் உண்மை.” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.