ஈரோடு சாக்கடையில் சிவப்பு நிறத்தில் தண்ணீர் செல்வதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம், பெரியசேமூர், சூளை மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள சாக்கடையில் சிவப்பு நிறத்தில் நீர் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள பாலத்தின்கீழ் கொட்டப்பட்டுள்ள சாய கழிவு மூட்டைகள் மூலம் நிறம் மாற்றம் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஈரோட்டில் சாய கழிவு நீரை கால்வாயில் கலந்ததை அடுத்து 30 சாய ஆலைகள் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.