(கோப்பு புகைப்படம்)
யாரேனும் போதைப்பொருட்களை பயன்படுத்தினால் அவர்களின் வியர்வை வழியாக அதனைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை சவுத் கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தோலுடன் பொருத்தக்கூடிய ஒருவகை சென்சார் மூலம் இதனை சாத்தியப்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சோதனையில் இருப்பதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த மருத்துவர் ஹோ சாங் ஜுங் குழுவினர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சென்சாரை நம் தோலில் பொருத்தினால், தோலில் உண்டாகும் வியர்வை மூலமே போதைப்பொருள் பயன்பாட்டை கண்டுபிடிக்க முடியும். இது வழக்கமான மருத்துவ முறைகளை விடவும் மாறுபட்டது என்கின்றனர் மருத்துவக்குழுவினர்.
பொதுவாக உடலில் உள்ள போதைப்பொருட்களை கண்டுபிடிக்க சிலவகையான மருத்துவ முறைகள் உள்ளன. அவை ரத்தம், சிறுநீர் போன்ற மாதிரிகளை கொண்டு கண்டுபிடிக்கும் முறை. அந்த முறைகளுக்கு நேரம், ஆய்வகம் போன்ற சில விஷயங்கள் அடிப்படையாகவே தேவை. ஆனால் சென்சார் முறைப்படி வியர்வை மூலம் போதைப்பொருட்களின் பயன்பாட்டைக் கண்டுபிடிப்பது எளிதான முறை என்கின்றனர் மருத்துவர்கள்.