கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லாத விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா “ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அடைய முடியும் என்பது உள்ளூர் மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.  இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் மத்திய அரசின் இத்தகைய முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” எனவும் அவர் பேசினார்.

image

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் கோரிக்கைகளை கல்வித்துறை அமைச்சகம் பரிசீலிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.