“அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம்” என்று திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக பதிலளித்துள்ளது.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

image

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்பி கனிமொழி “அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்” என பதிவிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி 30 ஆம் தேதி தனது பிரசாரத்தில்போது திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்ததையும் மேற்கோள்காட்டியிருந்தார்.


இப்போது இதற்கு பதிலளித்துள்ள அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் “அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம். பின்குறிப்பு : வெற்று #அறிக்கைநாயகன் ஸ்டாலின் என்ற பட்டத்தை உறுதி செய்த கனிமொழி அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.