பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தே மத்திய அரசு வேளாண்சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலம் 5 ரோடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் “மத்திய அரசு வேண்டுமென்றே விவசாயிகளை பாதிக்கும் வகையிலான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. உணர்வு மிக்க விவசாயிகளே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். விவசாயிகள் கண்ணியமாக போராடும் போதே அழைத்துப் பேசாத அரசு இப்போது விவசாயிகள் மீது குற்றம்சாட்டுகிறது. இது விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிரான சட்டம்.

image

மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. நான் உளப்பூர்வமாக வேல் ஏந்தினேன். ஸ்டாலின் ஓட்டுக்காக ஏந்தியிருக்கிறார். யார் வேல்-ஐ கையில் எடுத்தாலும் என் முகம்தான் ஞாபகம் வரும். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தீர்க்காத குறைகளை 100 நாட்களில் தீர்த்து விடுவாரா ஸ்டாலின்?

7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிறையை திறந்து விடுவிப்போம். ராகுல்காந்தி நடிக்க ஆசைப்பட்டுதான் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது நடிப்பு தமிழகத்தில் செல்லாது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.