கொரோனா தொற்றால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வரும் 27-ஆம்தேதி விடுதலையாகி சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

image

பிப்ரவரி 2 அல்லது 3-ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று சென்னை திரும்பும் சசிகலா, சென்னை வந்ததும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள எம்.நடராஜன் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.