“வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் தடுப்பூசி நிர்வாகத்தைக் பார்வையிட்ட பிறகு பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ டெல்லியில் உள்ள 81 தடுப்பூசி மையங்களில் 8,100 பேருக்கு தடுப்பூசி கிடைக்கும். வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்” எனக் கூறினார்